மணல் கடத்திய லாரி பறிமுதல்
ஆலங்குடி பகுதியில் மணல் கடத்திய லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-06-08 07:58 GMT
மணல் கடத்தல்
ஆலங்குடி பகுதியில் மணல் கடத்தப்படுவதாக ஆலங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்தபோது அந்த லாரியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.