குட்கா விற்பனை - கடைக்கு சீல், உரிமையாளர் கைது

நன்னிலம் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மளிகை கடை உரிமையாளரை கைது செய்த போலீசார் கடைக்கு சீல் வைத்தனர்.

Update: 2023-12-22 08:55 GMT

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா 

நன்னிலம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக நன்னிலம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நன்னிலம் போலீசார் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மளிகை கடை மற்றும் பெட்டி கடைகளில் சோதனை செய்தனர். அப்போது நன்னிலம் அருகே குவளைக்கால் மெயின் ரோட்டில் உள்ள ஒரு மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மளிகை கடை உரிமையாளர் கலையரசன் என்பவரை கைது செய்தனர். மேலும் உணவு பாதுகாப்பு துறையினர் அந்த மளிகை கடையை பூட்டி சீல் வைத்தனர்.
Tags:    

Similar News