செல்வப்பெருந்தகை நாளை குமரி வருகை

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

Update: 2024-03-03 05:51 GMT
செல்வபெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்ட பின்பு, முதன் முறையாக குமரி மாவட்டத்திற்கு நாளை வருகை தர உள்ளார். அவரது சுற்றுப்பயண முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.       நாளை 4-ம் தேதி திருநெல்வேலியில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மதியம் 2 மணிக்கு சாலை வழி நாங்குநேரியில் இருந்து குமரி மாவட்டம் புறப்படுகிறார்.

பின்னர் வெள்ளமோடியில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை மகளிர் காங்கிரஸ் சார்பில் நடைபெறும் உலக மகளிர் தின மாநாட்டில் பங்கேற்கிறார்.           அன்று கன்னியாகுமரியில் இரவு ஓய்வெடுக்கும்  அவர் மார்ச் 5ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு மற்றும் நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் மார்த்தாண்டத்தில் நடைபெறுகின்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். 

மதியம் 2:00 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து மதுரை புறப்பட்டு செல்கிறார். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேர்தலுடன், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஆகியவை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை ஆலோசனை நடத்த உள்ளார்.

Tags:    

Similar News