செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா !

சாணார்பட்டி அருகே கணவாய்பட்டியில் செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2024-03-23 07:11 GMT

கும்பாபிஷேக விழா

சாணார்பட்டி அருகே கணவாய்பட்டியில் செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.முன்னதாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று புனித நீருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பட்டு திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் தலைமையில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கலசத்திற்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கணவாய்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நிஷா ராமகிருஷ்ணன், திம்மணநல்லூர் ஊராட்சி செயலர் வெற்றிவேந்தன் உள்பட சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News