வாணியம்பாடி : திமுக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொடுட்கள் அனுப்பி வைப்பு

Update: 2023-12-08 01:42 GMT

திமுக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர திமுக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பு வைப்பு. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாணியம்பாடி நகர திமுக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளுவர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாணியம்பாடி நகர திமுக சார்பில் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணி பொருட்கள், உணவு பொருட்களை திமுக மாவட்ட அலுவலகத்தில் நகர திமுக செயலாளர் வி.எஸ்.சாரதிகுமார், மாவட்ட திமுக செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜியிடம் ஒப்படைத்தார். நிவாரண பொருட்கள் ஒருங்கிணைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது நகர துணை செயலாளர் தென்னரசு, குபேந்திரன், நகரமன்ற உறுப்பினர் மா.பா.சாரதி உட்பட நகர திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது!
Tags:    

Similar News