சென்னைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு 

பேராவூரணி லயன்ஸ் சங்கம் சார்பில் சென்னைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

Update: 2023-12-16 08:06 GMT

 பேராவூரணி லயன்ஸ் சங்கம் சார்பில் சென்னைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சென்னையில் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கோகனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சாரபாக மண்டல ஒருங்கிணைப்பாளர் எஸ்.பாண்டியராஜன் ஏற்பாட்டில், சங்க உறுப்பினர்கள் ஒத்துழைப்போடு, சாசனத் தலைவர் எம்.நீலகண்டன், மாவட்டத் தலைவர் வ.பாலசுப்பிரமணியன், சாசன பொருளாளர் எஸ்மைதீன் பிச்சை, முதல் துணைத் தலைவர் பி.ரமேஷ்,இரண்டாம் துணைத் தலைவர் ஜி.வி.ராஜ்குமார், மூத்த செய்தியாளர் கான்முகமது ஆகியோர் முன்னிலையில் சங்கத் தலைவர் எஸ்.ஏ.தெட்சிணாமூர்த்தி தலைமையில் ரூ.85 ஆயிரம் மதிப்புள்ள, தலா 200 எண்ணிக்கையிலான போர்வை, சேலை, கைலி ஆகிய நிவாரண பொருள்கள் பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.  இந்நிகழ்சியில் முன்னால் பொருளாளர்கள் பி.பழனிவேல், சபரி ஏ.முத்துக்குமார், சங்கர் ஜவான், நிர்வாக அலுவலர் டி.குமரன், ஏ.வெங்கடேசன், பெரியசாமி, ஆவி.ரவி, ஜி.சசிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News