ஆம்பூரில் தொடர் பைக் கொள்ளை: இருவர் கைது

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் பைக் கொள்ளையில் ஈடுப்பட்ட 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-25 13:10 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியில் திலகா பைனான்ஸ் நடத்தி வருபவர் கார்த்திக் இவர் தனது கடை அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மேல் மாடியில் உள்ள பைனான்ஸ் கடையில் அமர்ந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த 2 இளைஞர்கள் கார்த்திக்கின் இருசக்கர வாகனத்தை கள்ள சாவி போட்டு திறந்து கொள்ளையடித்து செல்ல முற்படும்போது, அங்கிருந்து பொதுமக்கள் ஒன்று திரண்டு 2 இளைஞர்களையும் சரமாரியாக தாக்கி ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் ஆம்பூர் நகர காவல் துறையினர் 3 இளைஞர்களையும் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த அரவிந்தன்,வல்லரசு,என்பதும் இரண்டு பேரும் பேர்ணாம்பட்டு மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார பல்வேறு இடங்களில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை கொள்ளையடித்ததாக காவல்துறையினரின் விசாரணையில் ஒப்புக்கொண்டனர்.

பின்னர் 2 பேர் மீது ஆம்பூர் நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரும் கொள்ளையடித்த 11 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News