சேவைக் குறைபாடு: புதிய வாகனம் வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு

சேவைக் குறைபாடு காரணமாக புதிய நான்கு சக்கர வாகனம் மற்றும் 1,10,000 ரூபாய் இழப்பீடு ஆகியவற்றை நான்கு சக்கர விற்பனையாளர் வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பிததது.;

Update: 2024-05-02 07:01 GMT

பைல் படம் 

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தைச் சார்ந்த அருள் லிபின் என்பவர் தூத்துக்குடி எட்டயாபுரம் ரோட்டிலுள்ள நான்கு சக்கர வாகன விற்பனையாளரிடம் ஒரு கார் வாங்கியுள்ளார். அங்கேயே நான்கு சர்வீஸ்கள் செய்துள்ளார். நான்காவது சர்வீஸ் செய்த போது குறைந்த அளவு இஞ்சின் ஆயில் ஊற்றப்பட்டதால் இந்தக் காரின் இஞ்சின் முழமையாக பழுதடைந்துள்ளது. கார் வாங்கிய ஒரு வருடம் 2 மாதத்திற்குள்ளாகவே முற்றிலும் பழுதானதால் புதிய கார் தருமாறு கேட்டுள்ளார்.

Advertisement

ஆனால் கார் விற்பனையாளர் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அருள் லிபின் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் பழுதான நான்கு சக்கர வாகனத்திற்கு பதில் புதிய நான்கு சக்கர வாகனம் மற்றும்; சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 1,00,000 வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 ஆகியவற்றை இரு மாத காலத்திற்குள்; வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News