மக்கள் நீதிமன்றம் - 3021 வழக்குகளுக்கு தீர்வு

மாவட்டம் முழுவதும் நிலுவையில் உள்ள பல வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது

Update: 2023-12-11 02:15 GMT

மக்கள் நீதிமன்றத்தில் 3021 வழக்குகளுக்கு தீர்வு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல்லில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3021 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.தேசிய, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம்முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா தலைமையில் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது.தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகனா, மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய சிறப்பு சார்பு நீதிபதி சாமுண்டீஸ்வரிபிரபா, கூடுதல் உரிமையியல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரெங்கராஜ், குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரியா, கூடுதல் மகிளா நீதிமன்ற குற்றவியல் நீதித்துறை நடுவர் சவுமியா மாத்யூ பங்கேற்றனர்.மாவட்டம் முழுவதுமாக நிலுவை வழக்குகள், முன்வழக்குகள் என 3021 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
Tags:    

Similar News