திருவாரூர் மாவட்டத்தில் ஏழு ரவுடிகள் கைது

திருவாரூர் மாவட்டத்தில் எஸ்பியின் அதிரடி உத்தரவின் பேரில் 7 ரவுடிகள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Update: 2024-02-05 01:36 GMT

ரவுடிகள் கைது

திருவாரூர் மாவட்டத்தில் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்படி அதிரடி சோதனை நடைபெற்றது. அதிரடி சோதனையில் அகரத்திரு நல்லூர் பகுதியைச் சேர்ந்த புகழேந்தி ,அரசவன ங்காடு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், வலங்கைமான் பகுதியைச் சேர்ந்த ராகுல், வலங்கைமான் கீழ அக்ரஹாரத் தெருவை சேர்ந்த அஜய் என்கிற அஜய்குமார், முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த குறிஞ்சி வேந்தன், திருத்துறைப்பூண்டி கோவிலூர் வடக்கு காட்டைச் சேர்ந்த அருண்குமார், அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் ராஜா ஆகிய ஏழு ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News