பள்ளி வளாகத்துக்குள் புகுந்த கழிவுநீர்

நிலக்கோட்டை அருகே பள்ளி வளாகத்துக்குள் மழை நீரும், சாக்கடை நீரும் கலந்து சென்றதால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-01-10 11:14 GMT

 நிலக்கோட்டை அருகே பள்ளி வளாகத்துக்குள் மழை நீரும், சாக்கடை நீரும் கலந்து சென்றதால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பள்ளிக்குள் மழை நீரும் சாக்கடை நீரும் கலந்து சென்றதால் மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று இரவு தொடர்ந்து மழை பெய்தது .இந்நிலையில் இன்றும் மழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிவு நீர் மற்றும் சாக்கடை நீர் பள்ளியில் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு பள்ளி நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பார்களா ? என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News