செங்கல்பட்டு அருகே சாலையில் வழிந்தோடும் கழிவுநீர், வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு அருகே சாலையில் வழிந்தோடும் கழிவுநீர், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளகி வருகின்றனர்.

Update: 2024-03-28 15:27 GMT

குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலை

செங்கல்பட்டு மாவட்டம்,காட்டாங்கொளத்துார் ஒன்றியம், திம்மாவரம் ஊராட்சியில் உள்ள முக்கிய தெருக்களில், சாலையில் குறுக்கே செல்லும் கழிவுநீர் பாதையில் உடைப்பு ஏற்பட்டு, நடுவில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் சறுக்கி, அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.

இதை சரி செய்ய துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்..

Tags:    

Similar News