மேட்டூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது

மேட்டூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-12-17 13:21 GMT

கைதான வாலிபர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம்,மேட்டூர் அருகே நங்கவள்ளியை சேர்ந்த தம்பதியின் மகள் அங்குள்ள அரசுப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி பள்ளி முடிந்து நேற்று மாலை சாணாரப்பட்டி கந்துக்காரன் காடு வனப்பகுதி வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார்.

அவரை இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த கூலித் தொழிலாளி செல்வராஜ் (24) ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது. மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை கண்ட செல்வராஜ் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார்.

இது குறித்து மாணவியின் பெற்றோர் நங்கவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில்  தப்பிச்சென்ற செல்வராஜை போலீசார் கைது  செய்து அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News