கடையை உடைத்து பணம் திருட்டு - போலீசார் வழக்கு

தேவகோட்டையில் கடையை உடைத்து பணம் திருட்டு - போலீசார் விசாரணை

Update: 2024-02-22 10:37 GMT

கடையை உடைத்து பணம் திருட்டு - போலீசார் வழக்கு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை மெயின் ரோட்டில் ராம்நகரில் உள்ள வணிக வளாகத்தில் முத்துக்கிருஷ்ணன் என்பவர் கடை நடத்தி வருகிறார். இவரது கடை பூட்டை உடைத்த அடையாளம் தெரியாத சிலர் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.65 ஆயிரத்தையும் திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து முத்துகிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத திருடர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News