கூடலூர் அருகே கடையடைப்பு போராட்டம்

கூடலூர் அருகே சிறுமியை தாக்கிய சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கோரி கடையடைப்பு செய்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-05 15:00 GMT

கூடலூரில் கடைகள் அடைக்கப்பட்டன

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கொளப்பள்ளி டேண்டி பகுதியில் நேற்று மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த கிருத்திகா(4) என்ற சிறுமியை சிறுத்தை தாக்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக தப்பிய சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வனத்துறையை கண்டித்து கொளப்பள்ளி பகுதியில் இன்று கடையடைப்பு மற்றும் வாகனங்கள் இயக்காமல் கிராம மக்கள் 500 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News