சிலம்பம்: தங்கம் வென்ற திருச்சி மாணவி

கர்நாடகாவில் நடந்த சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில், தங்கம் பதக்கம் வென்ற திருச்சி மாணவிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

Update: 2024-01-03 15:50 GMT

கர்நாடக மாநிலம் கூர்கில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டிகள் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி தொடங்கி 2 தினங்கள் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு ஆந்திர பிரதேசம், கர்நாடகம், மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில் தமிழ்நாடு சார்பில் வீரர் வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில், திருச்சி மாவட்டம் சமயபுரத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவி யாழினி போட்டியில் பங்கேற்றார். இதில் தனித்திறமை பிரிவான ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, குத்து வரிசை, மான் கம்பு, வாள், வாள் - கேடயம், சுருள் ஆகிய பல போட்டிகள் நடைப்பெற்றது. இதில் தமிழகம் சார்பில் போட்டியில் பங்கேற்ற சமயபுரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி யாழினி ஒற்றைக் கம்புப் போட்டியில் தங்கமும், இரட்டைக் கம்பில் போட்டியில் வெள்ளி பதக்கங்களை வென்று சொந்த ஊருக்கு திரும்பினர். தங்கம்,வெள்ளி வென்று மண்ணிற்கு பெருமை சேர்த்த பள்ளி மாணவிக்கு பொதுமக்கள், பெற்றோர்கள் சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்து பாராட்டுகளையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News