சிவகிரி சார்பதிவாளர் அலுவலகம் இடமாற்றம்

சிவகிரி சார்பதிவாளர் அலுவலகம் சீரமைப்புப் பணிக்காக தென்காசி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-07-01 14:10 GMT

சிவகிரி சார்பதிவாளர் அலுவலகம் சீரமைப்புப் பணிக்காக தென்காசி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.


தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சிவகிரியில் சார் பதிவாளர் அலுவலகம் சேதம் அடைந்ததையடுத்து, சீரமைப்பு பணிகள் தொடங்கியது. இதில் சுமார் ரூ.1.95 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய சார்பதிவாளர் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் வரை, தென்காசி மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சிவகிரி அம்பேத்கர் சிலை அருகே உள்ள திருவள்ளுவர் கலைக்கூடத்தில் வைத்து சார்பதிவாளர் அலுவலகம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News