சிவகாசி : செல்போன், கம்ப்யூட்டர் திருட்டு - வடமாநில தொழிலாளர்கள் கைது

சிவகாசி அருகே தொழிற்சாலையில் செல்போன் மற்றும் கம்பியூட்டர் திருடிய இரண்டு வடமாநில தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-20 06:55 GMT

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருணாச்சலம் ரோட்டை சேர்ந்த குருசாமி மகன் செந்தில்குமார்(49). இவர் சிவகாசி அருகே பள்ளப்பட்டியில் ஆசிர் கண்டெய்னர் என்ற பெயரில் வாலி தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.செந்தில்குமார் தனது நிறுவனத்திற்கு சென்ற போது,அங்கு இருந்த இரு கம்ப்யூட்டர் மற்றும் இரு செல்போன்களை காணவில்லை.

அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது,அங்கு வேலை செய்யும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த விகிகுமார்(25), அவரது சகோதரர் ரவிக்குமார்(18) ஆகியோர் அதிகாலை 1 மணிக்கு சுவர் ஏறி குதித்து உள்ளே வந்து கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்களை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விகிகுமார், ரவிக்குமார் இருவரையும் கைது செய்து, திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். அதன்பின் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News