சிவகாசி : சிவன் கோவில்களில் வைகாசி மாத பிரதோஷ விழா

சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் நடந்த வைகாசி மாத பிரதோஷ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Update: 2024-05-21 07:14 GMT

நந்தி பகவானுக்கு வெள்ளி கவச அலங்காரம்


விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்று பகுதியிலிருக்கும் சிவன் ஆலயத்தில் வைகாசி மாத பிரதோஷ விழா அதிவிமர்ச்சியாக கொண்டப்பட்டன. பக்தர்கள் கொண்டு வந்த காணிக்கை பொருளான இளநீர்,பால்,தயிர், மஞ்சள்,பன்னீர்,சந்தனம் மற்றும் வாசன திரவியங்களை கொண்டு நந்தி பகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் நந்தி பகவானுக்கு சந்தனகாப்பு வைத்து வெள்ளி கவசம் அணிந்து வண்ண, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.இந்த பிரதோஷ விழாவில் சிவகாசி மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த சிவன் பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை வணங்கி சென்றனர்.
Tags:    

Similar News