விராலிமலையில் சிறுதானியங்கள் சாகுபடி பயிற்சி முகாம்!

விராலிமலையில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாமை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சிறுதானியங்கள் சாகுபடி குறித்து பயிற்சி முகாம் நடந்தது

Update: 2024-02-20 10:13 GMT


விராலிமலையில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாமை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சிறுதானியங்கள் சாகுபடி குறித்து பயிற்சி முகாம் நடந்தது


விராலிமலையில் வட்டார வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாமை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சிறுதானியங்கள் சாகுபடி குறித்து பயிற்சி முகாம் நடந்தது. வேளாண்மை துணை இயக்குனர் ஆதி சாமி தலைமை வகித்து சிறுதானியங்களுக்கான சோளம், கம்பு ,கேழ்வரகு, திணை ,வரகு, சாமை, குதிரைவாலி ஆகியவற்றின் பயன்பாடு உற்பத்தி குறித்து எடுத்துரைத்தார்.

வேளாண்மை உதவி இயக்குனர் மணிகண்டன் அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம் மண் மற்றும் நீர் பரிசோதனை அவசியம் பசுந்தால் மற்றும் பசுந்தலை பயிர்களை உரமாக பயன்படுத்துவதன் மூலம் மண்வளம் மேம்படுவதுடன் மண்ணின் உள்ள நுண்ணுயிரிகளின் பெருக்கம் அதிகப்படுவது அதிகரிப்பது குறித்து விளக்கி கூறினார்.

Tags:    

Similar News