தென்மேற்கு பருவமழை : மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-05-31 03:17 GMT
தென்மேற்கு பருவமழை குறித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் ஆலோசனை  நடைபெற்றது. 2024 ஆம் ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை நேற்று  துவங்கும் என சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவிப்பு செய்தது. தமிழகத்தில் தற்போது கோடை வெயில் மீண்டும் கொளுத்தி எடுத்து வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தென்மேற்கு பருவ மழை எதிர்கொள்ளும் வகையில் அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்  ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கரூர் மாநகராட்சி மேயர் சுதா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News