காவலர்களுக்கு எஸ்.பி நேரில் வாழ்த்து

பயிற்சி முடித்து திருவாரூர் மாவட்டத்தில் அறிக்கை செய்த காவலர்களுக்கு எஸ்பி நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2024-02-02 15:44 GMT

வாழ்த்து தெரிவித்த எஸ்பி

காவலர் அடிப்படை பயிற்சி முடித்து திருவாரூர் மாவட்ட ஆயுதப் படையில் புதிதாக 240 காவலர்கள் பணிக்கு அறிக்கை செய்தனர் எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று புதிதாக பணிக்கு அறிக்கை செய்த காவலர்களுக்கு ஆயுதப்படையில் வழங்கப்படும் பணிகள் குறித்தும்,

பணியின் முக்கியத்துவம் குறித்தும், பொது மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும் எடுத்து கூறினார். அப்போது திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் சந்திர மோகன் உள்ளிட்ட காவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News