எஸ்பி தலைமையில் காவல்துறையினர் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தலைமையில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Update: 2024-01-25 04:59 GMT

உறுதிமொழி ஏற்பு 

நம் இந்திய திருநாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதியன்று தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. தேர்தலின் போது இளம் வாக்காளர்கள் உட்பட அனைத்து வாக்காளர்களையும் வாக்களிக்க ஊக்குவிப்பதே இந்த தேசிய வாக்காளர் தினத்தின் முக்கிய நோக்கமாகும். அதன்படி இன்று நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் நாகை மாவட்ட காவல் துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News