காவல் ஆய்வாளருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி!

பல்வேறு வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக காவல் ஆய்வாளர் டி. விநாயக மூர்த்திக்கு மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Update: 2024-06-12 02:53 GMT

காவல் ஆய்வாளர் விநாயக மூர்த்திக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய எஸ்பி 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, களம்பூர் ஆகிய காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் ஆகிய வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக காவல் ஆய்வாளர் டி. விநாயக மூர்த்திக்கு திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அப்போது காவல் துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News