புதிய நூலகத்தை திறந்து வைத்த சபாநாயகர்

திருநெல்வேலி மாவட்டம் வேப்பிலான்குளத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டபட்ட புதிய நூலகத்தை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு திறந்து வைத்தார்

Update: 2024-01-04 09:43 GMT

நூலகம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள வேப்பிலான்குளத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 7 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நூலகத்தை இன்று பேரவை தலைவர் அப்பாவு திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார்.அப்போது அவர் நூலகத்துக்கு கூடுதல் கட்டடம் கட்டித் தரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இதில் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் விஎஸ்ஆர் ஜெகதீஸ், உள்ளூர் பிரதிநிதிகள், திமுகவினர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
Tags:    

Similar News