அய்யனார் சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேக பூஜை

சாணார்பட்டி கோணப்பட்டி பூர்ணகலா புஷ்பகலா சமேத அய்யனார் சுவாமி கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது.

Update: 2024-02-26 05:40 GMT

சிறப்பு அபிஷேக பூஜை

சாணார்பட்டி கோணப்பட்டி பூர்ணகலா புஷ்பகலா சமேத அய்யனார் சுவாமி கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. விழாவையொட்டி விரதமிருந்து வந்த கிராம மக்கள், புனித நீராடி கோயிலுக்கு வந்தனர். பின் பூர்ணகலா புஷ்பகலா சமேத அய்யனார் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகளும், தீபாராதனையும் நடந்தது. பூஜைகளை மேட்டுக்கடை திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார்.
Tags:    

Similar News