நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

ஐப்பசி மாதம் முதல் ஞாயிற்றுகிழமையையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-10-22 13:45 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மாதந்தோறும் தமிழ் மாத முதல் ஞாயிற்று கிழமை அன்று நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், தயிர், திருமஞ்சனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று ஐப்பசி மாதம் முதல் ஞாயிற்று கிழமையை யொட்டி ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

வழக்கத்திற்கு மாறாக ஆஞ்சநேயர் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஆஞ்சநேயர் கோவிலில் வரும் 1 ந் தேதி திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News