புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

புத்தாண்டையொட்டி அரியலூர் மாவட்ட தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

Update: 2024-01-02 01:38 GMT

தூய லூர்து அன்னை ஆலயம்

 புத்தாண்டு பிறந்ததையொட்டி அனைத்து தேவாலயங்களிலும் இரவு முதல் காலை வரை சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. மேலும் ஆடல், பாடல்கள் மற்றும் பட்டாசு வெடித்து உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றனர். அதன் ஒரு பகுதியாக அரியலூர் நகரிலுள்ள தூய லூர்து அன்னை ஆலயம், சி.எஸ்.ஐ பள்ளி தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் புத்தாண்டை கொண்டாடினர். மேலும் கிறிஸ்தவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் மதவேறுபாடின்றி அனைவருக்கும் இனிப்பு மற்றும் கேக்குகளை வழங்கி கொண்டாடியது குறிப்பிடதக்கது.



Tags:    

Similar News