கோவிலுரில் சேலம் ஆயர் தலைமையில் சிறப்பு திருப்பலி
கோவிலூர் புனித சவேரியார் தேவாலயத்தில் பாஸ்க்கு பெருவிழாவை முன்னிட்டு சேலம் மறை மாவட்ட ஆயர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
By : King 24X7 News (B)
Update: 2024-04-07 09:31 GMT
தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட கோவிலுரில் அமைந்துள்ளது 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் தேவாலயம் இங்கு தற்போது பாஸ்க்கு பெருவிழா 3 நாட்கள் நடைபெற்று வருகின்றது.
விழாவின் இறுதி நாளான இன்று காலை 9 மணிக்கு சேலம் மறை மாவட்ட ஆயர் செல்வம் ராயப்பன் தலைமையில், பங்குத்தந்தை ஆரோக்கிய சுவாமி மற்றும் பங்கு தந்தையர்கள் கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றினர். இந்த நிகழ்ச்சிக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
இன்று இரவு எட்டு முப்பது மணிக்கு பல்சுவை கலை நிகழ்ச்சிகளும் அதனை தொடர்ந்து பிரம்மாண்டமான ஆடம்பர தேர் பவனி நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்.