சித்தேரி கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

சித்தேரி கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2024-01-02 10:40 GMT
முகாமில் கலந்து கொண்டவர்கள்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தலைவாசல் அருகே சித்தேரி கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.வட்டார தலைமை மருத்துவர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார்.

முன்னாள் எம். எல். ஏ. வும், மாவட்ட துணை செயலாளருமான சின்னதுரை, தலைவாசல் ஒன்றிய ஆட்மா குழு தலைவரும், மத்திய ஒன்றிய தி. மு.க. செயலாளருமான மணி என்கிற பழனிசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவேந்திரன் (தலைவாசல்), சின்னப்பையன் (இலுப்பநத்தம்). அவைத்தலைவர் பிச்சமுத்து, மாவட்ட பிரதிநிதி காசிலிங்கம், ஒன்றிய பொருளாளர் ரமேஷ், நாவலூர் கிளை செயலாளர் கருப்பையா மற்றும்ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், துணை தலைவர் கமலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். முடிவில் தி. மு. க. மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் கண்ணுச்சாமி நன்றி கூறினார்.

Tags:    

Similar News