காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பது தொடர்பாக சிறப்பு மேளா

மன்னார்குடியில் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பது தொடர்பாக சிறப்பு மேளா நடைபெற்றது.

Update: 2024-05-28 01:55 GMT

மன்னார்குடியில் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பது தொடர்பாக சிறப்பு மேளா நடைபெற்றது.


காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பது தொடர்பான சிறப்பு மேளா நன்னிலம் மன்னர்குடி திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை உட்கோட்டத்திலும் அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலும் நடைபெற்றது. இச்சிறப்பு மேலளாவில் பிற மாவட்டங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல் விவரங்கள் மற்றும் காணாமல் போனவர்களின் வயதை ஒத்த புகைப்படங்களைக் கொண்டு காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு காண்பிக்கப்பட்டு 22 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு மேலாவை எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து கண்டுபிடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
Tags:    

Similar News