ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை

சிவகங்கை மாவட்ட மாணவரணி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடைப்பெற்றது.

Update: 2024-03-09 04:05 GMT
ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை

சிவகங்கை மாவட்ட மாணவரணி சார்பில் மாணவரணி பொருளாளர் மணிமாறன் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 40 தொகுதிகளில் வெற்றி பெறவும் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரனி செயலாளர் தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ராஜாங்கம், தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் மருது பாண்டியன், மாவட்ட கலைப்பிரிவு துணைச் செயலாளர் கருப்பையா, மீனவரணி ராமச்சந்திரன், ஒன்றிய மாணவரணி சேதுபதி மற்றும் ஏராளமான நிர்வாகிகள் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News