எல்லை மாரியம்மன்,பால முருகனுக்கு சிறப்பு பூஜை

ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ராசிபுரம் ஸ்ரீ எல்லை மாரியம்மன், ஸ்ரீ பால முருகன் திருக்கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-06-23 01:46 GMT

எல்லை மாரியம்மன்,பால முருகன் 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பாளையம் சாலை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ எல்லை மாரியம்மன், ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு பல்வேறு சிறப்பு பூஜை அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ எல்லை மாரியம்மனுக்கும், ஸ்ரீ பாலமுருகன் சாமிக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
Tags:    

Similar News