காலபைரவருக்கு சிறப்பு பூஜை
சங்ககிரி அருகே அரசிராமணியில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.;
Update: 2024-02-02 15:44 GMT
சங்ககிரி அருகே அரசிராமணியில் அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி பகுதியில் உள்ள சோழீஸ்வரர் கோயிலில் உள்ள காலபைரவர் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சங்ககிரி வட்டம் அரசிராமணி சோழீஸ்வரர் கோயிலில் உள்ள காலபைவரருக்கு அஷ்டமியையொட்டி பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கால பைரவர் சுவாமியை வழிபாடு செய்தனர்.