மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டு விழாவையொட்டி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2024-04-15 11:40 GMT
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டு விழா நடைபெறும். இந்தாண்டு தமிழ்ப் புத்தாண்டு விழாவையொட்டி, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு மங்கல இசையுடன், ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் உறைவிடத்தில் உள்ள திருவுருவ படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு விழா, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் நடைபெற்றது.

உலக நன்மைக்காகவும், செவ்வாடை பக்தர்களின் நன்மைக்காகவும், சித்தர் பீடத்தில் நடைபெற்ற தங்கத் தேர் பவனியில், ஏராளமான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் மற்றும் சக்திபீட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News