பேராவூரணி குமரப்பா பள்ளியில் விளையாட்டு விழா
பேராவூரணி குமரப்பா பள்ளியில் விளையாட்டு விழா நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.;
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்து, விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில், எல்.கே.ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு 25, 50, 100, 200, 400, 800 மீட்டர் தூரம் உள்ள ஓட்டப்பந்தயங்கள், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.
இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பதங்கங்கள், கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, குமரப்பா அறக்கட்டளை பொருளாளர் அஸ்வின் கணபதி, அறங்காவலர்கள் ராமு, கணபதி, ஆனந்தன், நபிஷாபேகம், பள்ளி முதல்வர் சர்மிளா, உடற்கல்வி ஆசிரியர்கள் முரளிதரன், பவன்குமார், ரமேஷ், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.