மது அருந்த தண்ணீர் வாங்கி தர மறுத்தவருக்கு கத்தி குத்து

மயிலாடுதுறை அருகே மல்லியகொல்லை டாஸ்மாக்  கடைக்குச் சென்றவரை அங்கே குடித்துக் கொண்டிருந்த நபர் தண்ணீர் பாட்டில் வாங்கி வா என்று சொல்லியுள்ளார்.  அவர் முடியாது என்று கூறி எதிர்த்துப் பேசியுள்ளார் .இதனால் கையில் வைத்திருந்த கத்தியால் அவரை நெஞ்சில் குத்திவிட்டார்.

Update: 2024-03-23 05:12 GMT

காவல்

மயிலாடுதுறை அருகே உள்ள கிடாய் பகுதியை சேர்ந்தவர் குணசேகர் மகன் தர்மராஜ் (42) இவர் சம்பவ தினத்தன்று மெல்லிய கொள்ளைப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்து சென்றுள்ளார் கடை அருகே வில்லியநல்லூர் கலியமூர்த்தி மகன் பிரசாந்த் (34) என்பவர் குடித்துக்கொண்டிருந்த போது தர்மராஜை பார்த்து தண்ணி பாட்டில் வாங்கி வா என்று கூறியுள்ளார், அதற்கு தர்மராஜ் மறுக்கவே, நான் சொன்ன கேட்க மாட்டியாடா என்று கோபத்துடன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து தர்மராஜ் நெஞ்சில்  குத்திவிட்டு ஓடிவிட்டார். கத்தியால் குத்துப்பட்ட தர்மராஜ் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து தர்மராஜ் அளித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வில்லியநல்லூர் பிரசாந்த் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து காவலில் அடைத்தனர்.
Tags:    

Similar News