வெள்ளத்தை கையாள்வதில் மாநில அரசு தோல்வி - தமிழிசை சௌந்தரராஜன்

வெள்ளத்தை கையாள்வதில் மாநில அரசு தோல்வியடைந்துள்ளதாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

Update: 2023-12-25 06:23 GMT

தமிழிசை சௌந்தரராஜன் 

துத்துக்குடியில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி  ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முறையாக எடுத்து இருக்க வேண்டும் திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறிவிட்டது.  தென் மாவட்டத்தை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் தமிழக அரசு நடத்துகிறது.  ஆறு குளங்கள் எதுவும் தூர்வாரப்படவில்லை ,மழை நீரை சேமிக்க எந்த முயற்சி மேற்கொண்டீர்கள்? இந்த சூழ்நிலையை மாநில அரசு மிக மோசமாக கையாண்டுள்ளது வெள்ளத்தை கையாள்வதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது சென்னையை இவர்கள் மீட்டெடுக்கவில்லை மக்கள் தானாக மீண்டெழுந்தார்கள் அதேபோன்று இங்கு மக்கள் தானாக மீண்டு வருவார்கள். அரசாங்க உதவியோடு மக்கள் மீண்டு எழவில்லை. என்றார் 

Tags:    

Similar News