மாநில அளவிலான ஐவர் கால் பந்தாட்ட போட்டி

திண்டுக்கல் மாவட்டத்தில் பாலகிருஷ்ணாபுரத்தில் ராக்போர்ட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக மாநில அளவிலான ஐவர் கால் பந்தாட்ட போட்டி நடைபெற்றது.

Update: 2024-06-01 10:37 GMT

கால் பந்தாட்ட போட்டி 

பாலகிருஷ்ணாபுரத்தில் ராக்போர்ட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக மாநில அளவிலான ஐவர் கால் பந்தாட்ட போட்டி நடைபெற்றது திண்டுக்கல் ராக்போர்ட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக மாநில அளவிலான ஐவர் ஆடவர் கால்பந்தாட்ட போட்டி சனிக்கிழமை காலை 10 மணி அளவில் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி விளையாட்டு திடலில் நடைபெற்றது . இதனை ஒன்றிய கவுன்சிலர் பரமேஸ்வரி பாண்டித்துரை துவக்கி வைத்தார். தமிழகத்தில் இருந்து மதுரை, தேனி, திருச்சி, கோவை, தூத்துக்குடி உட்பட மொத்தம் 26 அணிகள் கலந்து கொள்கின்றன. இப்போட்டி நாக் அவுட் முறையில் நடைபெறுகிறது. இதன் இறுதிப்போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் மாலை நடைபெறும்.
Tags:    

Similar News