மேட்டூரில் மாநில அளவிலான மல்யுத்த போட்டி

மேட்டூர் அருகே நடந்த மாநில அளவிலான மல்யுத்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

Update: 2024-03-10 08:29 GMT

பரிசளிப்பு விழா 

சேலம் மாவட்டம் ,மேட்டூர் அருகே காவேரி கிராசில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் 20-வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான மல்யுத்த போட்டி நடைபெறுகிறது.  போட்டியை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் என். சந்திரசேகரன் தொடங்கி வைத்தார். இதில் சேலம் ,ஈரோடு, தருமபுரி,நாமக்கல், கரூர், திருநெல்வேலி உள்ளிட்ட 20-கும் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 200- கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். எடை அளவை கொண்டு ஆண்களுக்கு 20 பிரிவுகள், பெண்களுக்கு 10 பிரிவுகள் என மொத்தம் 30 பிரிவுகளாக போட்டி நடைபெறுகிறது. போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.சந்திரசேகரன் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
Tags:    

Similar News