பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி

தென்காசி பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடைபெற்றது

Update: 2024-03-21 02:23 GMT

 ஸ்டிக்கர் ஒட்டும் பணி

தென்காசி மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர்களிடம் வருவாய்த் துறை மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதே போன்று நேற்று மாலையில் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து பேருந்துகளில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி பேருந்துகளில் தேர்தல் குறித்த ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேர்தல் அதிகாரி உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News