வெண்ணந்தூர் - மல்லூர் சாலையில் கல்லை வைத்து மறியல்

வழித்தடம் ஆக்கிரமிப்புபட்டுள்ளதால் பாதை அடைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து வெண்ணந்தூர் - மல்லூர் சாலையில் கல்லை வைத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-05-25 14:10 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பேரூராட்சி 4வது வார்டு சீரங்கன்காடு பகுதியில் 100க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள ஓடை பகுதியை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமைப்பு செய்து வருகின்றனர். இந் ஓடை பகுதியை ஒட்டி பொதுமக்கள் வழித்தடம் உள்ளது. ஆக்கிரமைப்பு காரணமாக வழித்தடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரி, சீரங்கன்காடு பகுதி வழியாக செல்லும் வெண்ணந்தூர் - மல்லூர் சாலையில் அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் கல்லை வைத்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பேரூராட்சி அதிகாரிகள், வெண்ணந்தூர் போலீசார் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து கலைந்துச் சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பஸ் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News