திருப்பத்தூரில் இருந்து சென்றது புயல் நிவாரணப் பொருட்கள்

திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரூ. 60 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் கலெக்டர் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டன.

Update: 2023-12-08 13:33 GMT

 திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரூ. 60 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் கலெக்டர் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டன. 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பத்தூர் மாவட்டம் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 60லடசம் மதிப்பில் நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியர் அனுப்பிவைத்தார்!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 60 லட்சம் மதிப்புள்ள அத்தியவாச மளிகை பொருட்கள். மருந்து பொருட்கள் மற்றும் துணி வகைகள் தேங்காய்,பிஸ்கட், அரிசி, ரவை, கோதுமை, கேக், தண்ணீர், உள்ளிட்ட உணவு பொருட்கள், காய்கறிகள் மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை மூன்று லாரிகள் மூலம் சென்னை மாநகராட்சிக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அனுப்பிவைத்தார்.

  இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி மற்றும் திட்ட அலுவலர் செல்வராசு மற்றும் வட்டாட்சிய சிவப்பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News