வைக்கோல் போருக்கு தீ வைப்பு - ரூ.1 லட்சம் கால்நடை தீவனம் நாசம்

ஓசூர் அருகே வைக்கோல் போருக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான கால்நடை தீவனங்கள் எரிந்து நாசமானது.

Update: 2024-01-18 03:46 GMT
 கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, மத்தம் அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் சேகர்(44), இவர் தனது தோட்டத்தின் வீட்டருகே ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் நெல் பயிர் மற்றும் ராகி பயிர்களை சேகரித்து பசுமாடுகளுக்காக வைக்கோல் போரினை அமைந்திருந்தார். நேற்று மாலை வைக்கோல் போருக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால், புகை கிளம்பிய வைக்கோலில் தீ பரவுவதை தடுக்க தண்ணீரை கொண்டு அணைக்க முயன்றார்.  சேகருக்கு உதவியாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் வைக்கோவில் தீயை அணைக்க முயன்றும் தீ வைக்கோல் முழுவதும் பரவி மளமளவென எரிந்தது தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்க மேற்க்கொண்ட முயற்சிகளும் வீணான நிலையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான வைக்கோல் தீயில் எரிந்து நாசனமானது. இதுக்குறித்து மத்திகிரி போலிசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News