முல்லைப் பெரியாற்றில் மூழ்கி மாணவர் பலி

உத்தமபாளையத்தில் முல்லைப் பெரியாற்றில் மூழ்கி பிளஸ் 1 மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது;

Update: 2023-10-25 04:51 GMT

 மாட்டின்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

உத்தமபாளையம் அருகே உள்ள கோவிந்தன் பட்டியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் மாட்டின் ராயப்பம்பட்டியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மாட்டின் தனது நண்பர்களுடன் உத்தமபாளையத்தில் உள்ள முல்லைப் பெரியாறு தடுப்பணை பகுதியில் குளிக்க சென்றார். அங்கு அவர் ஆற்றில் உள்ள பாறை பகுதியில் நின்று குளித்ததாக கூறப்படுகிறது. அப்போது நிலை தடுமாறி மார்ட்டின் ஆற்றில் தவறி விழுந்தார். கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்ததால் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதற்கிடையே ஆற்றில் விழுந்த மாட்டின் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். மார்ட்டின் நீரில் மூழ்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், உடனடியாக உத்தமபாளையம் போலீஸ்சாருக்கு தகவல் தெரிவித்தனர். இரண்டு நாட்களாக முல்லைப் பெரியாற்றில் மாணவரை தேடும் பணி நடைபெற்ற நிலையில், இன்று பாறையின் இடுக்கில் மாணவரின் உடல் சிக்கி இருந்ததை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News