தேர்வுக்கு சென்ற சிறுமி மாயம்

மானாமதுரை அருகே தேர்வுக்கு சென்று மாயமான சிறுமியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Update: 2024-05-10 06:35 GMT

சிறுமி மாயம் 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள வெள்ளையந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் மதுரையில் உள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் 45 நாட்களுக்கு முன்பு பயிற்சிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி நீட் தேர்வு எழுதிவிட்டு மீண்டும் வீடு திரும்பாத நிலையில் அவரது பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சிறுமியின் தந்தை மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News