நெய்குப்பத்தில் மாணவி கர்ப்பம்: வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

நெய்குப்பத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2024-03-24 16:07 GMT

காவல் நிலையம் 

காஞ்சீபுரம் மாவட்டம் நெய்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ராசு (வயது 27). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் தனது உறவினர் வீட்டின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்காக செய்யாறு அடுத்த மாமண்டூர் கிராமத்திற்கு சென்றார்.

அங்கு தூங்கி கொண்டிருந்த 10 ம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மாணவிக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர்.

பரிசோதனையில் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.அதிர்ச்சி அடைந்த பெற்றோர் விசாரித்த போது நடந்ததை மாணவி தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் சின்ராசுவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News