மாணவி பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது

நாகர்கோவில் மேல கலுங்கடியை சேர்ந்த வசந்தராஜ், பிளஸ் 1 மாணவியுடன் பழகி வந்த நிலையில், பாலியல் பலாத்காரம் செய்ததால் போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-01-16 05:25 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மேல கலுங்கடியை சேர்ந்தவர் வசந்தராஜ் (23) தொழிலாளியான  இவருக்கும் நாகர்கோவில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1  படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.   ஒரு கட்டத்தில் மாணவியை  தனது நண்பரின் வீட்டுக்கு அழைத்து சென்று, 3 நாட்கள் அங்கே சிறை வைத்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தை வெளியே கூறக்கூடாது என மிரட்டல் விடுத்துள்ளார்.    

 இதை மாணவி வீட்டில் கூறியதையடுத்து  தாயார் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வசந்த ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு செய்து அவரை கைது செய்தனர்.   

 கைதான வசந்த ராஜ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது போலீசார் தன்னை தாக்கியதாக வசந்த ராஜ் கூறியுள்ளார் . ஆனால் டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் உடலில் எந்த காயமும் இல்லை. இதன் மூலம் அவர் நாடகமாடியது தெரிய வந்தது.   இவர் ஏற்கனவே 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறுமியிடம் அத்துமீறியதாக  கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு போக்சோ வழக்கு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News