கல்வி கடன் பெற மாணவர்களுக்கு அழைப்பு!

புதுகை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரியில் நாளை கல்வி கடன் முகாம் நடக்கிறது.

Update: 2024-02-14 04:30 GMT

புதுகை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரியில் நாளை கல்வி கடன் முகாம் நடக்கிறது.

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதுகை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டம் முன்னோடி வங்கி சார்பில் மாபெரும் சிறப்பு கல்வி கடன் முகாம் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரியில் 15 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.

முகாமில் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் புதுக்கோட்டை மாவட்டத்தை இருப்பிடமாக கொண்டு மற்ற மாவட்டங்களில் மற்ற மாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் கல்வி கடன் பெற தகுதியுடையோர் அவர் கல்வி கடன் பெற விரும்புவோர் ஏற்கனவே www. Vidyalakshmi.co.in அல்லது https://www.jansamarth.in என்ற இணையதளத்தில் பதிவு செய்திருந்தால் அதற்கான விண்ணப்ப நகலுடன் இல்லையெனில் புதிதாக விண்ணப்பிக்க ஆதாரம் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாணவ, (மாணவிகள் மற்றும் பெற்றோர் பான் கார்டு) 10, 11, 12 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ், சான்றிதழ் சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், கல்லூரி கட்டணங்களுக்கான சான்றிதழ், ஆவணங்களின் நகல்களுடன் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

Tags:    

Similar News