திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-29 05:39 GMT

ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2024 முன்னிட்டு திருவண்ணாமலை மற்றும் ஆரணி பாராளுமன்ற தொகுதிகளின் தேர்தல் பணி முன்னேற்றம் குறித்தும், கூடுதலாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் தேர்தல் மேற்பார்வையாளர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News